For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவனுடன் ஹோமோசெக்ஸ்-ஆசிரியர் கைது

Google Oneindia Tamil News

உளுந்தூர்பேட்டை: பள்ளி மாணவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பள்ளி உதவித் தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். அப்போது கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.

உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் மந்திரி. இவர் நெய்வேலியைச் சேர்ந்தவர்.

இவர் இதே பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவன் ஆனந்த பாபுவை கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவன் ஆனந்தபாபு பெற்றோர்கள் மற்றும் தலைமையாசிரியரிடம் புகார் செய்தனர்.

இதனையறிந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு உதவித் தலைமை ஆசிரியர் மந்திரியை நிரந்தரப் பணி நீக்கம் செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அப்போது பொதுமக்கள் வழிமறித்து ஆசிரியரை தாக்க முயன்றனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீதும், அந்த வழியே சென்ற பஸ்கள் மீதும் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீஸ் உதவி கண்காணிப்பாளரின் கார் உட்பட 5க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து, 15க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X