சிஇஓக்களுக்கு கண்ணியமாக சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்! - மாண்டேக் சிங் அலுவாலியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய சிஇஓக்களின் சம்பளம் குறித்த விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதற்குரிய சம்பளத்தைப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சமீபத்தில் கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. அதில் அவர், இந்தியாவில் யாரும் தலையீடற்ற சுதந்திரத்தை அடைந்துவிட்டதாகக் கூற முடியாது. இந்திய சிஇஓக்களின் சம்பள விவகாரத்தில் அரசின் கட்டுப்பாடு ஏதுமில்லை... ஆனால் ஒழுங்குமுறைப்படுத்தும் கடமை அரசுக்கு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்த மாண்டேக் சிங் அலுவாலியி, 'சிஇஓக்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது அந்தந்த நிறுவனங்களின் இயக்குநர் குழுவின் பொறுப்பு. ஆனால் நிச்சயம் இந்த சம்பளம் கண்ணியமான அளவுக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை', என்று அவர் கூறியுள்ளார்.

'சர்வதேச அளவில் நிறுவனங்களின் பெய்ல் அவுட்டுக்காக 1.6 ட்ரில்லியன் டாலர் அளவு அரசுகள் செலவிட்டு வருகின்றன. எனவே சட்டம் அனுமதிக்கும் அளவு சிஇஒக்களுக்கு நல்ல சம்பளம் தருவது நிறுவனங்களின் பொறுப்பு' என்றார் அலுவாலியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+