இன்டர்வியூவூக்குப் போன 28 வயதுப் பெண் கற்பழிப்பு
டெல்லி: டெல்லி அருகே வேலைக்கு இன்டர்வியூவுக்குப் போன இளம் பெண் கற்பழிக்கப்பட்டார்.
மஹிபால்பூர் என்ற இடத்திற்கு அருகே உள்ள ரங்கபுரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணின் வயது 28. பட்டதாரியான அவர் ஒரு பிளாஸ்டிக் பைபர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்காக இன்டர்வியூவுக்குச் சென்றபோது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இன்டர்வியூவுக்கு வந்த அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்தை குளிர்பானத்தில் கொடுத்து மயக்கமடையச் செய்த பின்னர் அவரை அந்த நிறுவன உரிமையாளர் கற்பழித்து விட்டார்.
பின்னர் தப்பி ஓடி விட்ட அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ரமேஷ் வர்மா. 35 வயதாகும் அவர் வசந்த் கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவத்தில் ரமேஷ் தவிர வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாக பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும் ரமேஷ் மட்டுமே குற்றவாளி என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில்தான் டெல்லியில் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவன ஆசிரியை ஒரு கும்பல் கற்பழித்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில் இன்னொரு கற்பழிப்பு நடந்திருப்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.