நாளை வருகிறார் ஜெ. - 58 அதிமுக குடும்பங்களுக்கு ரூ. 17 லட்சம் நிதி அளிக்கிறார்

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் கொட நாடு சென்ற ஜெயலலிதா சுமார் 5 மாதத்துக்கு பின் முதன் முறையாக நாளை சென்னை வருகிறார்.
வரும் 12ம் தேதி அதிமுக தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் அவர் கலந்து கொண்டு அதிமுக குடும்பத்தினருக்கு உதவி தொகை வழங்குகிறார்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அதிமுகவின் துவக்க விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் அண்ணா தொழிற் சங்கப் பேரவை உறுப்பினர்களில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் நலிந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அரசியல் எதிரிகளாலும், சமூக விரோதிகளாலும் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்த மற்றும் விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்த 12 அதிமுகவினர்களின் குடும்பங்கள் மற்றும் அதிமுக தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள 46 நலிந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு என ஆக மொத்தம் 58 குடும்பத்துக்கு ரூ. 17.5 லடசம் நிதி உதவி வழங்கப்படும்.
இதை வரும் 12.10.09 அன்று மதியம் 2 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா வழங்குகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சென்னை திரும்புவதைத் தொடர்ந்து அதிமுக வட்டாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. அதிமுக தலைமைக் கழகத்தில் தடபுடலான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்!












Click it and Unblock the Notifications