முஷராபை கைது செய்ய இன்டர்போலை நாடுகிறது பாக்.

ஒரு நாட்டில் இருந்து தப்பியோடிவிட்ட அல்லது விசாரணைக்கு வராமல் ஓடிய நபரை பிடித்து தருமாறு சம்பந்தப்பட்ட நாடுகள் கோரும்போது, இன்டர்போல் ரெட் கார்னர் அலர்ட் விடுப்பது வழக்கம்.
தற்போது முஷாரப்புக்கு எதிராக இன்டர்போலின் உதவியை நாட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில்,
பாகிஸ்தான் அரசு இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது. பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் நவாப் அக்பர் பக்தி கொல்லப்பட்ட வழக்கில் அவரை பிடித்து கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
பலுசிஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு ராணுவ தாக்குதலில் பக்தி கொல்லப்பட்டது தொடர்பாக அவர் மீதும், முன்னாள் பிரதமர் சௌகத் அசிஸ் ஆகியோர் மீதும் வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளதை அடுத்து இம்முடிவுக்கு வந்துள்ளோம்.
அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் அவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications