சுற்றுச் சூழலுக்கு பாதகமில்லாத பட்டாசுகள் அறிமுகம்
தீபாவளி என்றால் படார், படீர் பட்டாசுகளும், அது கக்கும் புகையும்தான் நினைவுக்கு வரும். ஆனால் இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்துகி்ன்றன, எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என்று பட்டாசுகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்போர் கூறி வருகின்றனர்.
இதையடுத்து தற்போது பட்டாசுத் தயாரிபபாளர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதகத்தை ஏற்படுத்தாத பட்டாசுகளைத் தயாரிக்க முன்வந்துள்ளனர். இந்த வகை பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு ஒரு பாதகமும் ஏற்படாது, அதிக புகையும் வராது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பட்டாசு மொத்த விற்பனையாளர் குல்ஷர் ஆசாத் என்பவர் கூறுகையில், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகம் உள்ளது. எனவே நாங்களும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பட்டாசுகளை அறிமுகப்படத்தியுள்ளோம்.
இவை விலை மலிவானவை, அதிகம் புகையைக் கக்காதவை, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை என்றார்