திருவாரூர் - நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம்: மம்தா

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனின் கோரிக்கையை ஏற்று, திருவாரூர் வழி தடத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளாராம்.

டெல்லியில் நடைபெற்ற உணவு பதப்படுத்துதல் குறித்த மாநில அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற தமிழக பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில்,

திருவாரூர் வழித்தடத்தில் அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்றதால் திருவாரூரில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்ற ரயில்கள் நிறுத்தப்பட்டன.

திருவாரூர் வழியாக சென்னை சென்ற ரயில்களில் மற்றும் 2000 பேர் பயணம் செய்ததாக பயணச்சீட்டு பதிவு விவரங்கள் தெரிவிக்கிறது.

இவ் வழியாக சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ் மற்றும் உள்ளிட்ட ரயில்கள் அகல ரயில் பாதை பணியால் நிறுத்தப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற வழிப்பாட்டு தலமான திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், சிக்கல் சிங்காரவேலர், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கோயில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு பொது மக்கள் சென்று வர திருவாரூர் வழித்தடமே மையமான பகுதியாக உள்ளது.

எனவே பொது மக்கள் பலன் பெறும் திருவாரூர் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை இயக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அமைச்சர் மதிவாணனின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, நிறுத்தப்பட்ட ரயில்கள் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+