உள்ளாட்சி இடைத் தேர்தல்-திமுக வெற்றி
சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
திமுக 50 இடங்களிலும் காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 17 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
249 பதவியிடங்கு நடந்த தேர்தலில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 11 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 14 நகராட்சி வார்டு உறுப்பினர், 5 மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர், 17 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 50 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 19 நகராட்சி வார்டு உறுப்பினர், 1 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 24 இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர், 14 நகராட்சி வார்டு உறுப்பினர், 2 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 17 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
3 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் மதிமுக வேட்பாளர்களும், ஒரு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
1 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 4 நகராட்சி வார்டு உறுப்பினர், 7 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 12 பதவியிடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
புறநகர் பகுதிகளில் திமுக வெற்றி:
சென்னையைப் பொறுத்தவரை ஆலந்தூர், திரிசூலம், பல்லாவரம், சிட்லப்பாக்கம், காட்டாங்கொளத்தூர் ஆகிய புறநகர் பகுதிகளில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
பீர்க்கன்கரணையில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications