உள்ளாட்சி இடைத் தேர்தல்-திமுக வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக 50 இடங்களிலும் காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 17 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

249 பதவியிடங்கு நடந்த தேர்தலில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 11 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 14 நகராட்சி வார்டு உறுப்பினர், 5 மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர், 17 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 50 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 19 நகராட்சி வார்டு உறுப்பினர், 1 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 24 இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர், 14 நகராட்சி வார்டு உறுப்பினர், 2 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 17 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

3 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் மதிமுக வேட்பாளர்களும், ஒரு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

1 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 4 நகராட்சி வார்டு உறுப்பினர், 7 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 12 பதவியிடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

புறநகர் பகுதிகளில் திமுக வெற்றி:

சென்னையைப் பொறுத்தவரை ஆலந்தூர், திரிசூலம், பல்லாவரம், சிட்லப்பாக்கம், காட்டாங்கொளத்தூர் ஆகிய புறநகர் பகுதிகளில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

பீர்க்கன்கரணையில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+