சென்னை இரட்டைக் கொலை- வேல் முருகன் காதலி கைது
சென்னை: சென்னை இரட்டைக் கொலை வழக்கில் கைதாகியுள்ள முக்கியக் குற்றவாளி வேல்முருகனின் கேரளத்துக் காதலி தற்போது கைதாகியுள்ளார்.
சென்னை அசோக்நகரில் வசித்து வந்த அனந்தலட்சுமி மற்றும் அவரது மகன் சூரஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி வேல்முருகன் உள்பட மூன்று பேர் கைதாகியுள்ளனர். இந்த நிலையில் வேல்முருகனின் கேரளத்துக் காதலியான தானியாவையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
அனந்தலட்சுமி, சூரஜைக் கொன்ற பிறகு அனந்தலட்சுமியிடமிருந்த நகைககளைப் பறித்து இவரிடம்தான் வேல்முருகன் கொடுத்து வைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் கொலை பற்றிய தகவல் தெரிந்தும் உண்மையை மறைத்த குற்றத்துக்காக தானியா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தானியாவின் கணவர் பெயர் ராதாகிருஷ்ணன். இவர் திருச்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் டீக் கடை வைத்து நடத்தி வருகிறார். ஒரு மகன், மகளும் உள்ளனர். ஜாபர்கான்பேட்டையில், குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில்தான் வேல்முருகனுடன், தானியாவுக்கு கள்ளக் காதல் மலர்ந்தது. இந்தக் காதலால் கண்மூடித்தனமாக செலவு செய்த வேல்முருகன், தானியாவிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தர முடியாமல்தான் அனந்தலட்சுமியிடம் பணம் கேட்டு அவர் மறுக்க பின்னர் கொலைக் குற்றத்தைப் புரிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications