For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய தூதரக தாக்குதல்: ஐஎஸ்ஐதான் காரணம்-ஆப்கன் தூதர்

Google Oneindia Tamil News

Nirupama Rao in Kabul blast site
வாஷிங்டன்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவுதான் காபூல் இந்தியத் தூதரகம் மீதான தாக்குதலுக்குக் காரணம் என்று அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் கூறியுள்ளார்.

காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தை தகர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் ஆப்கானிஸ்தானியர்கள் 17 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ உள்ளதாக அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் சையத் ஜாவேத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வாஷிங்டனில் கூறுகையில், பாகிஸ்தான் தான் இந்த சம்பவத்துக்குக் காரணம் என்பதை நாங்கள் தயங்காமல் சொல்கிறோம். அவர்களது ஐஎஸ்ஐதான் காரணம்.

எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலும், முன்பு நடந்த தாக்குதலுக்கும், இதற்கும் உள்ள ஒற்றுமைகளின் அடிப்படையிலும் இதைச் சொல்கிறோம் என்றார்.

தனது நாட்டில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ தான் காரணம் என்று ஆப்கானி்ஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X