காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் நீர்-முதல்வர்
சென்னை: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை 23 ஆயிரம் கன அடியாக உயர்த்தி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக கடந்த 28.07.09 முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அவர்களுக்கு துவக்கத்தில் 5 ஆயிரம் கன அடி நீர் என ஆரம்பித்து தற்போது 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் இருக்கும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொய்த்த காரணத்தால், மேட்டூரின் கொள்ளளவான 120 அடி எட்டப்படவில்லை. அதிகபட்சமாக 101 அடியை மட்டுமே எட்டியுள்ளது. அதுவும் தற்போது 91 அடியாக குறைந்துவிட்டது.
வடகிழக்குப் பருவமழை இன்னும் தமிழகத்தில் ஆரம்பிக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை இன்று முதல் 23 ஆயிரம் கன அடியாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களில் போதிய மழையின்மை காரணமாக, கடைமடைப் பகுதிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்ற விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முறையீட்டை ஏற்கப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் வெண்ணாற்றில் தற்போது வழங்கப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்கிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications