வெள்ளம்- ரோசய்யா வேன் மீது மக்கள் கல்வீச்சு
ஹைதராபாத்: ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்ற முதல்வர் ரோசய்யா மீது பொது மக்கள் கல்வீச்சில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழை ஆந்திராவை புரட்டி போட்டுவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவிக்கின்றனர். இதையடுத்து மாநில முதல்வர் ரோசய்யா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்னூல், மெகபூப் நகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று கர்னூல் மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த அவர், அங்கிருந்து கோவில்கள் நிறைந்துள்ள ஆலம்பூர் பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் பேருந்தில் ஏறி அருகிலிருந்த கல்லூறு கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் பலர் அவரை ஏதேச்சையாக பார்த்துவிட்டனர். அவர்கள் முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்து வைத்தனர்.
ஆனால், அந்த கும்பலில் இருந்த சிலர் அவருக்கு எதிராக கோஷம் போட்டனர். தாமதமாக வருவதாக குற்றம்சாட்டினர்.
சுற்றுப்பயணத்தை தொடர்ந்த ரோசய்யா, துங்கபத்ரா நதியை கடந்து பஞ்சலிங்காலா என்ற கிராமத்துக்கு திறந்த வேனில் சென்றார். அங்கும் அவருக்கு எதிராக மக்கள் கோஷமிட்டனர். வெறும் கண்துடைப்புக்காக வரக்கூடாது. நீங்கள் அரசியல் செய்வதற்கு நாங்களா கிடைத்தோம். உடனடியாக இடத்தை காலி செய் என்றனர்.
முதல்வர் பார்வையிடுவதால் எங்களது வயிறு நிறைந்துவிடுமா? ஆபத்து நேரத்தில் உதவாமல் ஒரு வாரம் கழித்து வந்து என்ன பயன் என கோஷமிட்டனர்.
மக்கள் கடும் கொதிப்பில் இருப்பதை பார்த்த அதிகாரிகள் ரோசய்யா அங்கு இருக்க வேண்டாம் என கேட்டு கொண்டனர். இதையடுத்து ரோசய்யா வந்த வாகனம் அப்பகுதியில் நிற்காமல் கொஞ்சம் தூரம் தள்ளி சென்று நின்றது. அங்கு ஓடி வந்த மக்களிடம் மட்டும் அவர் புகார்களை பெற்று கொண்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் கர்னூல் செல்வதற்கு பஞ்சலிங்காலா வழியே வந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் நிற்காமல் சென்ற காரணத்துக்காக அவரது வாகனத்தின் மீது கல்வீச்சில் இறங்கினர். இந்த சம்பவத்தில் முதல்வருடன் அந்த வேனில் வந்த போட்டோகிராபர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications