இலங்கைக்கு எம்பி குழு ஏமாற்று வேலை-பாமக

Subscribe to Oneindia Tamil

கடலூர்: இலங்கைக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பியிருப்பது ஏமாற்று வேலை என பாமக அமைப்பு செயலாளர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது குறி்த்து அவர் கடலூரில் நிருபர்களிடம் கூறுகையில்,

இலங்கையில் முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருக்கும் தமிழர்களைப் பார்ப்பதற்காக, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பியிருப்பது ஏமாற்று வேலை.

இந்தக் குழுவில் ஆளும் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் அனுப்பி இருக்க வேண்டும். இதன் மூலம் உண்மை எதுவும் வெளிவரப் போவதில்லை.

முதல்வர் கருணாநிதியை சமாதானப்படுத்துவதற்காகவும் அவரை ஏமாற்றவுமே இந்த குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

தமிழக மீனவர்கள் இனி தாக்கப்படமாட்டார்கள் என்ற உறுதி மொழியையாவது இந்த குழு பெற்று வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+