Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்விக் கடன் அலைகழிப்பு-மாணவர் தீக்குளிப்பு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்விக் கடனுக்கு அதிகாரிகள் அலைய வைத்தால் அந்த விரக்தியில் மாணவர் ஒருவர் தீக்குளித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொந்தராயன்குளத்தை சேர்ந்தவர் பிச்சை (60). கூலி தொழிலாளியான இவரது மகன் செல்லத்துரை (21).

பி.ஏ. ஆங்கிலம் முடித்துள்ள செல்லத்துரை இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி ஸ்டெல்லா மேரி கல்லூரியில் பி.எட். சேர்த்தார்.

கல்லூரிக் கட்டணம் செலுத்த அவர் கனரா வங்கியில் விண்ணப்பம் செய்திருந்தார். கடன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ரூ. 40,000த்தை வட்டிக்கு வாங்கி கல்லூரியில் கட்டணமாக செலுத்தினார்.

ஆனால், வங்கிக்கு பலமுறை அலைந்தும் கல்விக்கடன் கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

வங்கிகளில் கல்விக் கடன் தடையற்ற முறையில் அதிகாரிகள் வழங்கி வருவதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்த்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+