For Daily Alerts
Just In
மானிய விலையில் மது தர கோரிக்கை!!!
புதுச்சேரி: மானிய விலையில் மது வழங்க வேண்டும் என பிரெஞ்சு-இந்திய புதுச்சேரி விடுதலை கால மக்கள்நல நற்பணி இயக்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்த இயக்கத்தின் தலைவர் டி. சிவராஜ் விடுத்துள்ள அறிக்கையில்,
பிரெஞ்ச்க்காரர்கள் ஆட்சி செய்த புதுவையில் மதுபானங்களின் விலை தாறுமாறாக அதிகரித்துவிட்டது. எனவே, முதல்வர் வைத்திலிங்கம் மானிய விலையில் மதுபானங்களை வழங்குவதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
ஏழை, எளியவர்கள், கூலித் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் புதுச்சேரி பிரெஞ்ச் கலாசாரம் நிறைந்த பகுதியாகும். உழைத்திடும் தொழிலாளர்கள் மதுபானத்திற்காக அதிகம் செலவிடுவது வேதனைக்குரியது.
எனவே, தேசிய உணர்வுமிக்க முதலமைச்சர் வைத்தியலிங்கம் மதுபானங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, October 14, 2009, 14:56 [IST]