போலி வக்கீல் விவகாரம்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
மதுரை: மதுரையில் உயர் நீதிமன்றம் உள்ட பல நீதிமன்றங்களில் வழக்காடி வந்த போலி வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யாத இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரையில் உயர் நீதிமன்றம் உள்ட பல நீ மன்றங்களில் வழக்காடி வந்த போலி வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை மதுரை பார் கவுன்சில் நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலி வக்கீல் மீது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். ஆனால், விசாரணைக்கு பின்பு கிருஷ்ணமூர்த்தியை விடுவித்துவிட்டார்.
இதனால் கோபமடைந்த வக்கீல்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் கன்ட்ரோல் ரூமிற்கு இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டார்.
ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications