For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த ஆண்டு 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு அறிமுகம்- ரிசர்வ் வங்கி

Google Oneindia Tamil News

Rupees
திருச்செந்தூர்: அடுத்த ஆண்டுமே மாதத்தில் புதிதாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

அதேபோல, ஏடிஎம்களில் கள்ள நோட்டு வருவதை தடுக்க ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தலைமையில் உயர் மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு்ச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன் பட்டிணத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடந்தது. இதை துவக்கி வைத்த ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்எம் மாஜி நிருபர்களிடம் கூறுகையில்,

ரிசர்வ் வங்கி பவள விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக கிராமத்தை நோக்கி என்ற திட்டத்துடன் கிராம மக்களை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வகையில் இதுபோன்ற முகாம்களை நடத்தி வருகிறோம்.

பொதுமக்கள் புதிய ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை பயன்படுத்தும் வகையில் 300 முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். ரிசர்வ் வங்கி புதிதாக பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் முன்னோட்டமாக ரூ.10 ரூபாய நோட்டுகள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தபடும்.

முதல் கட்டமாக ரூ.100 கோடி நோட்டுகள் வெளியிடப்படும். இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தால் மற்ற ரூபாய் நோட்டுகளும் பிளாஸ்டிக்கில் வெளியிடப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X