நாள் 1: 2400 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர் - டி.ஆர்.பாலு
சென்னை: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து நேற்று 2400 தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.பாலு தலைமையின திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு இலங்கை சென்று திரும்பி வந்தது. இந்தக் குழுவின் வருகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, வியாழக்கிழமையிலிருந்து (நேற்று) 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய முதல் நாள் நிலவரம் குறித்து டி.ஆர்.பாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் நிலையினை நேரில் கண்டறிய முதல்வர் கருணாநிதி கோரிக்கையினை ஏற்று சென்ற தமிழக எம்.பி.க்கள் குழு கடந்த 10 முதல் 14-ம் தேதி வரை இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் நிலையை கண்டு, இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் விளக்கினர்.
அதற்கு அவர், இப்பிரச்சினைக்கு உரிய முறையில் விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அவருடன் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் பற்றி முதல்வர் கருணாநிதியிடம் நேரில் எடுத்துரைக்கப்பட்டது. அதோடு இக்குழுவின் விளக்க அறிக்கை முதல்வர் கருணாநிதியிடம் அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி, முதல்கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, நேற்று முகாம்களில் இருந்த 2,400 தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு குடியேறுவதற்காக பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களது உடனடி தேவைகளுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications