அண்ணாவின் மருமகள் துளசி காலமானார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வசர் அறிஞர் அண்ணாவின் மருமகள் துளசி கெளதமன் (59) சென்னையில் நேற்று காலமானார்.
அண்ணாவின் 3வது வளர்ப்பு மகன் சி.என்.எ. கெளதமன். இவரது மனைவி துளசி உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது உடல் நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் நாளை தகனம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக இருந்த துளசி டாடா குழும நிறுவனமான வைஷ்ணவி கம்யூனிகேசன் நிறுவனத்தில் கன்சல்டன்ட்டாக பணியாற்றியவர்.
இவருக்கு சரிதா என்ற மகள் உள்ளார்.












Click it and Unblock the Notifications