For Daily Alerts
Just In
கனடாவில் நுழைந்த தமிழ் அகதிகள் கப்பல் சுற்றி வளைப்பு
டோராண்டோ: 76 இலங்கை தமிழ் அகதிகளுடன் கனடாவுக்குள் நுழைந்த கப்பலை அந் நாட்டு கடற்படை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை கைது செய்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன் ஓஷன் லேடி என்ற அந்தக் கப்பல் வான்கூவர் தீவுக்கு அருகே வந்தபோது கனடா கடற்படை சுற்றி வளைத்தது. அதில் இருந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது.
கனடாவில் குடியேற அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அவர்களை பிரிட்டிஷ் கொல்பியாவில் உள்ள ஒரு சிறையில் வைத்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடா பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந் நாட்டில் குடியேறுவது சமீபகாலமாக மிகவும் சிரமமாகிவிட்டது.
Story first published: Sunday, October 18, 2009, 13:27 [IST]