நெல்லையில் கள்ள துப்பாக்கியுடன் 3 பேர் கைது - துப்பாக்கி ஆலையும் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் பழிக்கு பழியாக கொலை செய்ய கள்ள துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கள்ள துப்பாக்கி தயாரித்து கொடுத்தவரும் கைதானார். கள்ளத்துப்பாக்கித் தொழிற்சாலையும் கண்டுபிடிக்கப்பட்டது.

வீரவநல்லூரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த செப் 29ம் தேதி அம்பாசமுத்திரத்தில் வைத்து அதே ஊரை சேர்ந்த அம்பலவாணன், பழனிசாமி, சார்லஸ் உள்ளிட்ட கு்ம்பல் வெட்டி கொலை செய்தது.

இவ்வழக்கில் தொடர்புடைய சிலரிடம் கள்ள துப்பாக்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. நெல்லை டிஐஜி கண்ணப்பன், எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கரன்கோவிலில் பைக்கில் வந்த ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த கந்தசாமி, மற்றும் செய்துங்கநல்லூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜோசப், ஆகியோரை சங்கரன்கோவில தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயசில் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது கந்தசாமியிடம் ஒரு கள்ள துப்பாக்கி மற்றும் இரு தோட்டாக்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கியை சங்கரன்கோவிலை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் வாங்கி்யதாக கந்தசாமி தெரிவித்தார். கந்தசாமி, நடராஜன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

நடராஜனிடம் இருந்து கள்ள துப்பாக்கி தயாரிக்க வைத்திருந்த இரும்பு குழாய், 16 காலி தோட்டாக்கள், மற்றும் இரும்பு பைப், கோழி சண்டைக்கு பயன்படுத்தப்படும் கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் வீரபெருமாள் வீட்டிலிருந்து ஒரு கள்ள துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. நடராஜனிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன் துப்பாக்கி வாங்கிய அம்பையை சேர்ந்த முத்து என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+