ஆந்திர மாணவர் ஷாங்காய் நகரில் மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சீனாவின் ஷாங்காய் நகரில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.
ஷாங்காயில் உள்ள அவரது குடியிருப்பில் பிணமாகக் கிடந்தார். பிணம் பாதி அழுகிய நிலையில் இருந்தது. அறை ஒன்றில் பூட்டப்பட்ட நிலையில் உடல் கிடந்தது.
அவரது பெயர் மமிதி சந்தீப் சக்ரவர்த்தி. ஆந்தரி மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஷாங்காயில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் மமிதி. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் உடலை ஆந்திராவுக்குக் கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications