கடலில் தத்தளித்த 78 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தோனேசியாவில் அடைக்கலம்
ஜகார்த்தா: நடுக் கடலில் தத்தளித்த 78 தமிழர்களுக்கு இந்தோனேசிய அரசு தற்காலிக புகலிடம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
ஐந்து பெண்கள், ஐந்து குழந்தைகள் உள்பட 78 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழு ஒன்று படகில் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்தோனேசிய பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால், அவர்கள் உதவி கோரி ஆஸ்திரேலியாவுக்கு தகவல் அனுப்பினர்.
இதையடுத்து அங்கு ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் விரைந்தது. இந்தோனேசிய கடற்பகுதியில் தமிழர்கள் படகு இருந்ததால் யார் அவர்களைப் பொறுப்பேற்பது என்பதில் இரு நாடுகளுககும் இடையே குழப்பம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் மற்றும் இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதன் இறுதியில், இந்தோனேசியாவில் 78 தமிழர்களுக்கும் தற்காலிக புகலிடம் அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மனிதாபிமான நோக்கிலும், பாதுகாப்பு கருதியும், படகில் தத்தளித்துக் கொண்டிருக்கும் 78 பேரையும் இந்தோனேசியாவின் மெரெக் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லுமாறு அதிபர் சுசிலோ உத்தரவிட்டுள்ளதாக ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் 78 தமிழர்களும் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவார்கள். அவர்களை பொறுப்பேற்க யாரேனும் சர்வதேச அமைப்புகள் முன்வரும் வரை அவர்கள் இந்தோனேசியாவிலேயே வைத்து பராமரிக்கப்படுவர் என்றும் ஸ்மித் கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோல வரும் அகதிகளைக் கையாளுவது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
255 தமிழர்களின் நிலை என்ன...
இந்த நிலையில், ஏற்கனவே ஒரு படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்று தற்போது இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 255 இலங்கை தமிழர்களை அரசியல் புகலிடம் கோருபவர்களாக அங்கீகரிக்கும் பொருட்டு, ஐ.நா. சபையின் அகதிகள் உரிமை அமைப்பை கோரவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications