இலங்கை எரியும்போது மாநாடு நடத்தும் நவீன நீரோ கருணாநிதி - விஜயகாந்த்
சென்னை: தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்போவதாக முன்பு அறிவித்த கருணாநிதி தற்போது இதற்கு மாறாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழிலிலும் பிரித்தாளும் சூழ்ச்சி...
உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டதை தவிர்த்து விட்டு "உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை' நடத்த முடிவு செய்துள்ளார். இப்புதிய அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளதன் மூலம் சொந்தக் கட்சி முதல் வந்த கட்சி வரை தான் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழிலேயும் கருணாநிதி காட்டியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி துணை போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
பணம் சம்பாதிக்கவே வழி வகுக்கும்...
தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால் மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும் மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications