கலக்கும் தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள்!
திருப்பூர்: தேசிய அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திருப்பூர் அருகே சமத்துவபுரத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில்,
ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற பெரியார் கண்ட கனவை சமத்துவபுரம் திட்டம் மூலம் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது இத்திட்டம். அடுத்த 5 ஆண்டுகளில் 145 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.
2001ல் ஆட்சி மாறி ஜெயலலிதா முதல்வரானவுடன் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதுடன், கட்டப்பட்ட 145 சமத்துவபுரங்களும் கேட்பாரற்றுப் போயின. இதனால் அங்கு குடியிருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தததும் பராமரிப்பின்றி கிடந்த 145 சமத்துவபுரங்களையும் பராமரிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கினோம். மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கவும் உத்தரவிட்டோம்.
தேசிய அளவில் தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்களே சிறப்பிடம் பிடித்துள்ளதால் வங்கிக் கடன் தாராளமாக வழங்கப்படுகிறது. அகில இந்திய அளவிலுள்ள 10,081 லட்சம் மகளிர் குழுக்களுக்கு 2008-09ல் ரூ.11,132 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 2,174 கோடி தமிழக குழுக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மொத்த கடனில் 20 சதவீதம் தமிழக குழுக்கள் பெற்றுள்ளன. அதற்கு உரிய காலத்தில் தமிழக குழுக்கள் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியதே முக்கிய காரணம் என்றார் ஸ்டாலின்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications