கைதி கொலை-9 பாளை கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்
நெல்லை: பாளை மத்திய சிறையில் பழிக்குப் பழியாக கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து 9 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை வழக்கு கைதிகளான செல்லப்பா, சன்னியாசி உள்பட 9 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த செப்டம்பர் 26ம் தேதி பாளை வெளி சிறையில் இரண்டாம் பிளாக்கில் இருந்த பேச்சி்முத்து ஆதரவாளர்களான செல்லப்பா மற்றும் சன்னியாசியை மாணிக்க ராஜு என்பவரின் ஆதரவாளர்கள் இரும்பு கம்பி மற்றும் கம்பால் தாக்கினர்.
படுகாயமைடந்த செல்லப்பா நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். காயமடைந்த சன்னியாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிறை துறை ஏடிஜிபி ஷ்யாம் சுந்தர் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக மாணிக்கராஜ் ஆதரவாளர்கள் எஸ்டேட் மணி உள்பட 9 பேர் திண்டுக்கல், மதுரை, திருச்சி, கடலூர் ஆகிய சிறைகளுக்கு பலத்த போலீஸ் காவலுடன் மாற்றப்பட்டனர்.
பாளை சிறையில் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வரும் சில கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் சென்னை மற்றும் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக சிறை துறை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications