காஷ்மீர்-ஆப்கான்-பாகிஸ்தானில் நிலநடுக்கம்
காபூல்: ஹிந்துகுஷ் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் காஷ்மீ்ர், ஆப்கானி்ஸ்தான், பாகிஸ்தானில் கட்டடங்கள் அதிரிந்தன.
நள்ளிரவு 12.21 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கும் ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளும், பாகி்ஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், கைபர் கணவாய் பகுதிகளிலும் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் இல்லை.
காபூலுக்கு வட கிழக்கே 165 மைல் தொலைவில் நிலத்துக்கு அடியில் 122 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் காஷ்மீரிலும் இன்று அதிகாலை 1.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானது.
இதனால் ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன.












Click it and Unblock the Notifications