ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்ட தேர்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 27ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
கடந்த 9 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்து வந்த ஜார்க்கண்ட் மாநில சட்டசபை நேற்று முன்தினம் கலைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து அங்கு தற்போது தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஐந்து கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. நவம்பர் 27ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக டிசம்பர் 2, 8, 12 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெருகிறது.
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23ம் தேதி நடைபெறும். புதிய அரசு ஜனவரி 18ம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும்.












Click it and Unblock the Notifications