பாக்தாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு - 90 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: பாக்தாத் நகரில் இன்று நடந்த 2 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அரசு அலுவலகங்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்தது.
அமெரிக்க தூதரகம் உள்ள பகுதிக்கு வெகு அருகே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. இதே பகுதியில்தான் பிரதமரின் அலுவலகமும் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் இந்தத் தெரு வழியாக போக்குவரத்து திறன்து விடப்பட்டது. இங்கு நடந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதேபோல அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள இன்னொரு இடத்திலும் குண்டு வெடித்தது. இரு சம்பவங்களிலும் 90க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இரு குண்டுவெடிப்புகளில் 2வது குண்டுவெடிப்புதான் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications