பன்றிக் காய்ச்சல் பலி உயர்வு- அமெரிக்காவில் தேசிய அவசர நிலை பிரகடனம்

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி பல ஆயிரம் உயிர்களைப் பறித்துள்ள பன்றிக் காய்ச்சல் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 46 மாநிலங்களி்ல் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கு அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 1000 பேர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து அங்கு தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவில் அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை கூறுகையில், இதன் மூலம் வழக்கமான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பன்றிக் காய்ச்சல் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம், முன்னுரிமை தரப்படும்.
மருந்துகள், சிகிச்சை முறைகள் எளிமையாக கிடைக்க வகை செய்யப்படும்.
அனைத்து மட்டத்திலும் பன்றிக் காய்ச்சலை ஒழிக்க அரசு தயாராக உள்ளது. பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் தற்போது இந்த அசாதாரண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில்..
இதற்கிடையே, இங்கிலாந்தில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications