இலங்கை தூதரக தாக்குதல்-நீதிமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி சரண்

Subscribe to Oneindia Tamil

Dr Krishnasamy
சென்னை: டெல்லியில் இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 12 பேர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக டெல்லியில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் போராட்டம் நடந்தது.

அப்போது சாணக்கியபுரியில் உள்ள இலங்கை தூதரகம் மீது அக் கட்சியினர் சிலர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து கிருஷ்ணசாமி மற்றும் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்பட 12 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர்களை கைது செய்ய டெல்லி போலீ்ஸ் படை தமிழகம் வந்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.

அதை விசாரித்த நீதிமன்றம், கீழ் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 12 பேர் சென்னை எழும்பூரில் உள்ள 5வது வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இவர்கள் அனைவரும் தலா ரூ.10,000 செலுத்தி தனி நபர் ஜாமீன் பெற்றுக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+