குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுக்கிறது - மழை அதிகரிக்கும்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு, இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக திருச்செந்தூரில் 3 சென்டி மீட்டர் மழை பெய்தது. பூதப்பாடியில் 2 சென்டி மீட்டரும், சென்னை நுங்கம்பாக்கம், பொன்னேரி, தென்காசி, தக்கலை ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்,
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும்,உள்பட பல இடங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகலிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரவில் இடியுடன் மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி நாகை மாவட்டம் சீர்காழியில் 7 செ.மீ மழை பதிவானது.
பொன்னேரியில் 4, மயிலாடுதுறையில் 3, தாம்பரம், உத்திரமேரூர், பரங்கிப்பேட்டை, பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், குன்னூர் தலா 2 செமீ, சென்னை, மதுராந்தகம், காரைக்கால், திருத்துறைப்பூண்டி, சாத்தான்குளம், ஆரணி, வந்தவாசி தலா ஒரு செமீ மழை பதிவானது.
சென்னையில்...
இன்று அதிகாலையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேகம் சூழ்ந்து லேசான மழை பெய்து வந்தது. ஆனால் பிற்பகலுக்கு மேல் புறநகர்ப் பகுதிகளில் மழை குறைந்து லேசான வெயில் அடித்தது. வானம் லேசான மேக மூட்டத்துடன் தொடர்ந்து காணப்பட்டது.
ரெயின் கோட் வி்ற்பனை சூடு பிடித்தது...
நேற்று மாலையே மழை வந்து விட்டதால் சென்னை நகர பிளாட்பாரங்களில் ரெயின் கோட் விற்போர் குவியத் தொடங்கி விட்டனர். மழையிலிருந்து தப்ப மழை வந்தவுடன்தான் ரெயின் கோட் வாங்கும் 'நல்ல' பழக்கம் உடையோர் இவர்களிடம் ரெயின் கோட் வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications