தமிழர்கள் மறுகுடியேற்ற நடவடிக்கை - அமெரிக்கா வரவேற்பு

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடம் பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. இதை அமெரிக்கா வரவேற்கிறது.
அடுத்த சில நாட்களில் மேலும் 40 ஆயிரம் பேர் சொந்த கிராமங்களுக்கு அனுப்பப்படுவர் என்று அரசு அறிவித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுப் பாராட்டுகிறது.
ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வரும்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள அனைத்து மக்களையும் விடுவித்து சொந்த ஊர்களில் அவர்கள் குடியேற இலங்கை அரசு வழி வகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க் குற்ற விசாரணை- வெறும் கண்துடைப்பு...
இதற்கிடையே, ஈழப் போரின் கடைசி நாட்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் கோரிக்கைப்படி விசாரணை நடத்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வெறும் கண் துடைப்பு என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான போர்க்குற்ற விசாரணை நடவடிக்கை பாய்ந்து விடாமல் தடுக்கவே அவசரம் அவசரமாக தானே விசாரிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறுகையில், காலத்தை வீணடித்து, இலங்கையில் நடந்த ரத்தக்களறியை உலக சமுதாயம் மறக்கும் வரை இழுத்தடித்து, இந்த அவலத்தை அப்படியே மரித்துப் போக வைக்கும் முயற்சியாகவே இலங்கை அரசின் அவசர அறிவிப்பை எடுத்துக் கொள்ள முடியும்.
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் துரோகச் செயல் இது.
மனித உரிமை மீறல் அவலங்களை குழி தோண்டிப் புதைதக்கும் வகையிலான இன்னொரு முயற்சியாகவே இந்த விசாரணை அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த போரின் இறுதி நாட்களில் நடந்த அவலங்களை வெளிக் கொண்டு வர வேண்டுமானால், சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றுதான் ஒரே வழி என்று கூறியுள்ளார் பிராட் ஆடம்ஸ்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications