தமிழர்கள் மறுகுடியேற்ற நடவடிக்கை - அமெரிக்கா வரவேற்பு

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடம் பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. இதை அமெரிக்கா வரவேற்கிறது.
அடுத்த சில நாட்களில் மேலும் 40 ஆயிரம் பேர் சொந்த கிராமங்களுக்கு அனுப்பப்படுவர் என்று அரசு அறிவித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுப் பாராட்டுகிறது.
ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வரும்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள அனைத்து மக்களையும் விடுவித்து சொந்த ஊர்களில் அவர்கள் குடியேற இலங்கை அரசு வழி வகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க் குற்ற விசாரணை- வெறும் கண்துடைப்பு...
இதற்கிடையே, ஈழப் போரின் கடைசி நாட்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் கோரிக்கைப்படி விசாரணை நடத்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வெறும் கண் துடைப்பு என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான போர்க்குற்ற விசாரணை நடவடிக்கை பாய்ந்து விடாமல் தடுக்கவே அவசரம் அவசரமாக தானே விசாரிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறுகையில், காலத்தை வீணடித்து, இலங்கையில் நடந்த ரத்தக்களறியை உலக சமுதாயம் மறக்கும் வரை இழுத்தடித்து, இந்த அவலத்தை அப்படியே மரித்துப் போக வைக்கும் முயற்சியாகவே இலங்கை அரசின் அவசர அறிவிப்பை எடுத்துக் கொள்ள முடியும்.
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் துரோகச் செயல் இது.
மனித உரிமை மீறல் அவலங்களை குழி தோண்டிப் புதைதக்கும் வகையிலான இன்னொரு முயற்சியாகவே இந்த விசாரணை அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த போரின் இறுதி நாட்களில் நடந்த அவலங்களை வெளிக் கொண்டு வர வேண்டுமானால், சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றுதான் ஒரே வழி என்று கூறியுள்ளார் பிராட் ஆடம்ஸ்.
-
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா! -
ஈரான் - அமெரிக்கா போர்.. நீங்கள் சாப்பிடும் மீன் உணவுகளை பாதிக்க போகுது! எப்படி தெரியுமா? -
Kharg Island: ஈரானின் ”மணிமகுடம்” அடிமடியிலேயே கைவைத்த அமெரிக்கா.. கார்க் தீவில் அப்படி என்னதான் இருக்கிறது? -
ஈரானின் எரிபொருள் இதயத்திலேயே கை வைத்த டிரம்ப்.. கார்க் தீவிலேய களம் இறங்கிய அமெரிக்கா -
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications