40 பவுன் சங்கிலி அணிந்து இலங்கையிலிருந்து வந்த இருவர் கைது
சென்னை: கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தலா 40 மற்றும் 27 பவுன் தங்கச் சங்கிலியை அணிந்து வந்த ஒரு பெண் உள்ளிட்ட இருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானம் அண்ணா பன்னாட்டு முனையத்தில் இறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுந்தரம் (37) என்பவர் மீது சந்தேகம் வந்தது. காரணம், அவர் அணிந்திருந்த பளபள தங்கச் சங்கிலி. அவரிடம் இருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனை போட்ட போது எதுவும் இல்லை.
கழுத்தில் கிடந்த சங்கிலியைப் பற்றிக் கேட்டபோது, அது 40 பவுன் சங்கிலி எனத் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, சுற்றுலாவாக சென்னைக்கு வந்தேன். இந்த சங்கிலியை கழுத்தில் அணிந்து கொண்டு விமான நிலையத்தில் உள்ள ஒரு நபரிடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறினார்கள். இதனால் எடுத்து வந்தேன் என்றார்.
இதேபோல, அதே விமானத்தில் வந்த யாழ்ப்பாணம் தர்ஷினி (35) என்ற பெண்ணும் கை நிறைய தங்க வளையல்களை அணிந்து வந்திருந்தார். சுமார் 27 பவுன் தங்க வளையல்களை இவர் அணந்திருந்தார்.
இதுவும் கடத்தல் நகை என்று தெரிய வந்தது. இதையடுத்து 67 பவுன் நகைகளையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சுந்தரம், தர்ஷினியிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications