ஊட்டி கிளப்பில் ரெய்டு: மான்-நரி தலை சிக்கின
கோவை: ஊட்டியில் உள்ள பிரபல கிளப்பில் நடந்த திடீர் சோதனையில் மான், நரி ஆகியவற்றின் தலைகள் சிக்கின.
ஊட்டியில் உள்ள உதகமண்டலம் கிளப் பிரபலமானது. இங்கு தொழிலதிபர்கள், திரைத் துறையினர், அரசியல்வாதிகள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இங்கு வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெருமளவிலான மான்கள், நரிகள் ஆகியவற்றின் தலைகள் சிக்கின.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி செளந்தரபாண்டியன் கூறுகையில், மொத்தம் 82 விலங்குகளின் தலைகள் சட்டவிரோதமாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக கண்டுபிடித்து மீட்டோம்.
இவற்றில் 27 தலைகளுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டிருந்தது. மற்றவை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.
55 தலைகளில் 36 தலைகள் சாம்பார் ரக மான்களின் தலைகளாகும். 15 தலைகள் காட்டு நரியின் தலைகள் ஆகும். 4 தலைகள் பிளாக் பக் எனப்படும் மானின் தலைகளாகும் என்றார்.












Click it and Unblock the Notifications