ஆபாச புத்தகம் விற்ற தேமுதிக பிரமுகர்
நெல்லை: நெல்லையில் ஆபாச புத்தகத்தை விற்று வந்த தேமுதிக பிரமுகர், போலீஸாரைப் பார்த்ததும் புத்தகப் பார்சலை போட்டு விட்டு தலைதெறிக்க ஓடித் தலைமறைவானார்.
நெல்லையில் ஆபாச புததகங்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ் கமிஷனர் குணசீலன் உத்தரவின் பேரில் ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ, மற்றும் போலீசார் நேற்று வாகனங்கள் மற்றும் தனியார் நிறுவன பார்சல் அலுவலகத்தில் சோதனை போட்டனர்.
நெல்லை ஜஹ்ஷன் சிந்துபூந்துறை அருகே ஒரு தனியார் பார்சல் அலுவலகத்தில் சோதனை நடததியபோது அங்கிருந்த வாலிபர் ஒருவர் 3 பார்சல்களை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அதனை சோதனையிட்டதில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ஆபாச புத்தகங்கள் இருப்பது தெரிய வந்தது.
அந்த நபரின் பெயர் ஆனந்தமணி, சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர். இது தொடர்பாக ஆனந்தமணி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இவர் தேமுதிக வர்த்தக அணி பொறுப்பாளர் ஆவார்.