அவமதிப்பு-டிஜிபி மீதான புகார்-'முகாந்திரம் இல்லை'
சென்னை: உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள், - போலீஸார் இடையே நடந்த மோதல் தொடர்பாக தமிழக டிஜிபி மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று உயர்நீதிமன்ற வக்கீல்கள் - போலீஸார் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில்,
தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி., உளவுத் துறை டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை.
அதேபோல், வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.
நீதித்துறை சிறப்பாக செயல்பட போலீஸார், வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அவர்களுக்கு இடையே எழும் வேறுபாடுகளை சுமூகமான முறையில் பேசி தீர்க்க மாநில, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.
உயர் நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பாக ஒரு சில போலீஸ் அதிகாரிகள் தவறு செய்துள்ளதாக கண்டறிந்துள்ளோம். ஆனால், ஒட்டுமொத்த போலீஸாரும் தவறு செய்துள்ளதாகக் கருதக் கூடாது.
பிப்ரவரி 17-ம் தேதிக்கு முன்னதாக உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு மீண்டும் வழங்க வேண்டும். அதேபோல், மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
உயர் நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸார் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணை சி.பிஐ தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
இந்த விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
வக்கீல்கள் வரவேற்பு...
இந்த நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை வக்கீல்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.
உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறுகையில், வழக்கறிஞர்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததால் இந்த வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது. நீதிமன்றப் புறக்கணிப்பு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை நாங்கள் பின்பற்றுவோம் என்றார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், மோதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தும் என்று நம்புகிறோம் என்றார்.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications