யுஎஸ்: எப்பிஐ தாக்குதல்- முஸ்லீம் தலைவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் உம்மா என்ற அமைப்பின் தலைவராக இருந்த கிருஸ்டோபர் தாமஸ் என்ற லுக்மான் அமீன் அப்துல்லா (53) மீது லேப்டாப்கள், தோல் பொருட்களை கடத்தி வந்து விற்பது, சட்ட விரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்பது ஆகிய வழக்குகள் பதிவானயின.
இதையடுத்து இவரைக் கைது செய்ய எப்பிஐ அதிகாரிகள் மிச்சிகனில் உள்ள டியர்பார்ன் என்ற பகுதியில் உள்ள இவரது கிட்டங்கிக்குச் சென்றனர்.
அப்போது அதிகாரிகளிடம் சரணடைய மறுத்த அப்துல்லா, அவர்களை நோக்கி சுட்டார். இதையடுத்து எப்பிஐ அதிகாரிகள் திருப்பிச் சுட்டதில் அவர் பலியானார்.
அப்துல்லாவின் கூட்டாளிகளான 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் எப்பிஐ தாக்கல் செய்துள்ள வழக்கில், அமெரிக்காவில் ஒரு இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது தான் உம்மா அமைப்பின் குறிக்கோள் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த அமைப்பின் மீது தீவிரவாத குற்றச்சாட்டு எதையும் எப்பிஐ பதிவு செய்யவில்லை.
இந்த அமைப்பில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கறுப்பின அமெரிக்கர்கள் ஆவர். இவர்களில் பலர் சிறைகளில் இருந்தபோது மதம் மாறியுள்ளதாகவும் எப்பிஐ கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications