Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீரன் சுந்தரலிங்கம் படம் அவமதிப்பு - பதற்றம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் வீரன சுந்தரலிங்கம் படம் அவமதிப்பு செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியார் பட்டி முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் வீரன் சுநதரலிங்கம் போர்டு அந்த சமுதாயத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு யாரோ மர்ம நபர்கள் படத்தின் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். காலையில் அதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நூற்றுக்கனக்கான ஆண்களும், பெண்களும் மெயின்ரோடடுக்கு வந்தனர்.

தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் கமிஷனர் ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜ்பால், மற்றும் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பெயிண்ட் ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

வீரன் சுந்தரலிங்கம் படத்தை அவமரியாதை செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சொன்னதன் பேரில் அவர்கள் கலைநது சென்றனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+