தீவிரவாதியை சுட்டு வீழ்த்திய ருக்ஷானாவுக்கு போலீஸ் அதிகாரி பதவி- டெல்லிக்கு மாற்றம்
அவர் மட்டும்லலாமல் அவரது சகோதரர், உறவினருக்கும் இதேபோன்ற பதவியை தந்துள்ளது ஜம்மு காஷ்மீர் காவல்துறை.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி ரஜோரியில் உள்ள ருக்ஷானாவின் வீட்டுக்குள் லஷ்கர் தீவிரவாதிகள் புகுந்தனர். இதையடுத்து அவர்களைத் தாக்கிய ருக்ஷானா தீவிரவாதிகள் கையில் வைத்திருந்த ஏ.கே. 47 துப்பாக்கியை வாங்கி சரமாரியாக சுட்டார். இதில் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான். இன்னொருவன் காயமடைந்தான்.
இந்த வீரச் செயல் நாடு முழுவதும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி போலீஸ் காலனிப் பகுதியில் ருக்ஷானாவுக்கு வீடு தரப்பட்டு பாதுகாப்புடன் அவர் குடிமயர்த்தப்பட்டார்.
சமீபத்தில் ருக்ஷானாவின் வீட்டை தீவிரவாதிகள் தாக்கினர். ஆனால் அவர் குடும்பத்தினர் யாரும வீட்டில் அப்போது இல்லை.
இந்த நிலையில், ருக்ஷனாவுக்கு சிறப்பு போலீஸ் அதிகாரி பதவி தரப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜோரி மாவட்ட மூத்த எஸ்.பி. ஷப்கத் வட்டாலி கூறுகையில், ருக்ஷானா அவரது சகோதரர் அஜீஸ், உறவினர் வக்காலத் ஹூசேன் ஆகியோர் தீவிரவாதிகள் தாக்குதலில் காயமடைந்தனர். அனைவரும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
டெல்லிக்கு இடமாற்றம்...
இந் நிலையில் பாதுகாப்பு காரணங்களுகாக ருக்ஷானா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை மத்திய உளவுப் பிரிவினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ருக்ஷானாவை தீர்த்துக் கட்டுமாறு தீவிரவாதிகளுக்கு உத்தரவு வந்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளது.
ஆனால், அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லிக்கு மாற்றப்படவில்லை என்றும் எம்.எஸ்.பிட்டா ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளத்தான் ருக்ஷானாவும், அவரது சகோதரரும் டெல்லி சென்றுள்ளதாக ரஜோரி மாவட்ட எஸ்.பி. ஷப்கத் வட்டாலி கூறினார்.