கிரிக்கெட் ஸ்டேடியத்தில் துப்பாக்கி தோட்டாக்கள்
டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒரு நாள் போட்டி நடந்த டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் துப்பாக்கித் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இங்கு கிரிக்கெட் போட்டி நடந்தது. அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஏழு பிஸ்டல் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேடியத்தின் 2வது தளத்தில் உள்ள கழிப்பறையில் பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த 7 துப்பாக்கி வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இந்த வெடிகுண்டுகள் 10-15 அடியைச் சேர்ந்த துப்பாக்கியில் பொருத்தக் கூடியவை என கண்டறியப்பட்டுள்ளது
இதுதொடர்பாக ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடைமுறையை மீறிய டோணி, யுவராஜ்:
இந் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் பாதுகாப்பு நடைமுறையை மீறி ஹோட்டலை விட்டு வெளியே சென்றதாக பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திடம் சண்டிகர் போலீஸார் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்.பி. டூன் கூறுகையில், முதலில் யுவராஜ் சிங் பாதுகாப்புத் தடுப்புகளை மீறி தாஜ் ஹோட்டலை விட்டு இரவு 7.30 மணிக்கு வெளியே சென்றார். தனது நண்பர் ஒருவரின் காரில் அவர் சென்றார்.
சில நிமிடங்களில் கேப்டன் டோணி, ஹர்பஜன் சிங் ஆகியோரும் எந்தத் தகவலும் அளிக்காமல் வெளியேறியுள்ளனர்.
இதுகுறித்து வீரர்களின் பாதுகாப்பு பொறுப்பை மேற்கொண்ட டிஎஸ்பி ரோஷன் லால் எனக்கு அறிக்கை அளித்துள்ளார். இதன் அடிப்படையில், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளோம்.
வீரர்களின் பாதுகாப்பு முழுமையாக இருக்க வேண்டுமானால், வீரர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற சிலரின் செயல்களால் எங்களது பணி கடினமாகி விடுகிறது என்றார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் புகார் செய்யவுள்ளது பஞ்சாப் போலீஸ்.
இதுகுறித்து ஹோட்டல் ஊழியர் ஒருவர் கூறுகையில் தனது தந்தை யோகராஜ் சிங்கை சந்திப்பதற்காக நண்பருடன் யுவராஜ் சிங் சென்றதாக தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற 4வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை சண்டிகருக்கு இந்திய கிரிக்கெட் அணியினர் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications