சென்செக்ஸ் இன்று 507 புள்ளிகள் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை இன்று சரேலென்று மீண்டு வந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
இன்று ஒரே நாளில் 507 புள்ளிகள் உயர்வு கண்டது சென்செக்ஸ். அதே நேரம் நேற்று 400 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறிய பங்கு ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் நிறுவனத்தினுடையது.
9 சதவிகித உயர்வு கண்டன இந்நிறுவனப் பங்குகள். ஹிண்டால்கோ, டிஎல்எப், ஸ்டெரிலைட், ரிலையன்ஸ் மற்றும் டாடா ஸ்டீல நிறுவனப் பங்குகளும் நல்ல லாபத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்டன.
நஷ்டத்தில் கைமாறிய பங்குகள் மிகச் சிலதான். அதுவும் கூட 1 சதவிகிதத்துக்கும் குறைவான நஷ்டம்தான்.
ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் இன்று சாதகமான வர்த்தகம் நிலவியது.












Click it and Unblock the Notifications