ராமதாஸ் திக்கு தெரியாத காட்டில்: சரத்குமார்

சேலத்தில் நடந்த தனது கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். அப்படியென்றால், கலை உலகைச் சேர்ந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி ஏன் கூட்டணி அமைத்தார்?.
முதல்வர் கருணாநிதியும் கலை உலகைச் சேர்ந்தவர் தான். அவருடன் எப்படி கூட்டணி அமைத்தார். தற்போது ராமதாஸ் திக்கு தெரியாத காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்.
அவரைப் பற்றி நான் அதிகமாக குறைகூற கூடாது. அப்படிக் குறை கூறுபவன் அல்ல நான். ஆனால் எதிர்காலத்தில் அடிக்கடி கூட்டணி மாறுபவர்களுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளாது.
வரும் 12ம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், கூட்டணி வைத்து சந்திப்பதா? யாருடைய ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து கருத்துக் கேட்கப்படும்.
அதன்பிறகு 3 நாட்கள் அந்த கருத்துக்களை பரிசீலித்து, தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்பேன்.
கூட்டணி அமைவது கொள்கை அடிப்படையில் அமையும். எங்கள் இயக்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் கொள்கைகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி அமையும். கடந்த தேர்தலில் அமைந்த கூட்டணியாக நிச்சயம் அது இருக்காது.
திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பிரச்சனையை தவிர மற்ற விவகாரங்களில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டு வருகிறது என்றார் சரத்.
இப்போது தெரிகிறதா அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்று?!.












Click it and Unblock the Notifications