மேலும் லே ஆஃப்... அதிர்ச்சியில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

இந்த வார இறுதிக்குள் மேலும் 1200 ஊழியர்களை நீக்க மைக்ரோசாப்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5000 பணியாளர்களை நீக்குவதாக அறிவித்த மைக்ரோசாப்ட், படிப்படியாக அதைச் செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில் மேலும் சில ஊழியர்களை நீக்குவதாக நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.
இன்றைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டே இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இப்போதைய புதிய ஆட்குறைப்பில் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள் மற்றும் சீனர்களே எனத் தெரிய வந்துள்ளது.
இன்னொரு பக்கம் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் குறைந்த அளவு பணியாளர்களை புதிதாக நியமிக்கிறது மைக்ரோசாப்ட். ஆனால் லே ஆஃப் செய்யப்படும் ஊழியர் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவேயாகும்.
உறுதி செய்த மைக்ரோசாப்ட்:
இந்நிலையில் பணியாளர் நீக்கம் குறித்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதுவரை 800 பேர் நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதிப் பட்டியலில் இன்னும் கூடுதலான பணியாளர்கள் இடம்பெறுவார்கள் என்றும் இன்று வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 23-ம் தேதி நிலவரப்படி 91 ஆயிரம் நேரடி பணியாளர்கள் மைக்ரோசாப்டில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தப் பணியாளர்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications