For Daily Alerts
Just In
வேலையற்ற இளைஞர் உதவித் தொகை திட்டத்தில் மாற்றம்
சென்னை: வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த வரம்பு தற்போது ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
இத்திட்டத்தின் படி, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.150, 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.200, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.300ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 3.53 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, November 5, 2009, 13:02 [IST]