ஹெட்லி கைதைத் தொடர்ந்து பாக்.கில் 2 பேர் கைது - ப.சிதம்பரம்

எப்.பி.ஐயின் உத்தரவின் பேரில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிதம்பரம் கூறினார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதல் திட்டம் தீட்டிக் கைதாகியுள்ள அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு, பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது உறுதியாகியுள்ளது.
அதேபோல இந்த சதித் திட்டத்தில் பாகிஸ்தானின் தொடர்பும் நிச்சயமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு கோல்மேன் பலமுறை போயுள்ளார். எப்பிஐயின் அறிவுரைப்படி தற்போது 2 அல்லது அதற்கு மேற்பட்டோரை பாகிஸ்தான் படையினர் கைது செய்துள்ளனர் என்று எங்களுக்குத் தெரிய வந்துள்ளது என்றார் ப.சிதம்பரம்.
சமீபத்தில் கோல்மேன் மற்றும் பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு குடிமகன் தவார் ஹூசேன் ராணா ஆகியோரை எப்பிஐ அதிகாரிகள் அமெரிக்காவில் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படவில்லை...
தொடர்ந்து ப.சிதம்பரம் கூறுகையில், மத்திய அரசு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதுதொடர்பான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவி வருகிறது, அவ்வளவுதான்.
மத்திய அரசுத் தரப்பிலிருந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் திட்டமிடப்படவில்லை. நக்சலைட்டுகளை ஒழிக்கும் வேலையை மாநில அரசுகள் செய்து வருகின்றன. அதற்கு மத்திய அரசு உதவி செய்கிறது. மாநிலங்களின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் வேலை என்றார் ப.சிதம்பரம்.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications