31 சட்டசபைத் தொகுதிகள், 1 லோக் சபா தொகுதிக்கு இடைத் தேர்தல் - அமைதியான வாக்குப்பதிவு
டெல்லி: உ.பி. மாநிலம் பிரோசாபாத் லோக்சபா தொகுதி மற்றும் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 31 சட்டசபைத் தொகுதிகளுக்கும், உ.பி. மாநிலம் பிரோசாபாத் லோக்சபா தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
பிரோசாபாத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் ராஜ் பாபரும், சமாஜ்வாடி சார்பி்ல முலாயம் சிங்கின் மருமகள் டிம்பிளும் களத்தில் உள்ளனர்.
இத்தொகுதி தவிர 11 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் 10 தொகுதிளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். பெண்கள் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர்.
இடைத் தேர்தலில் இதுவரை எங்கும் வன்முறை நடந்ததாக தகவல் இல்லை.