தொடர்ந்து பெய்த அடை மழை - நிரம்பியது வீராணம் ஏரி
சென்னை: சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
கடலூர் மாவட்டம் வீராணத்தில் உள்ள ஏரி மிகப் பெரியது. இதன் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியாகும். ஆனால் ஏரிக் கரை பலவீனமாக இருப்பதால் 43.50 அடிக்கு மேல் உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதைத் தொடர்ந்து ஏரியிலிருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மேலும் சென்னைக்கும் 76 கன அடி குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
நேற்று முன் தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.80 அடியாக இருந்தது. நேற்று .30 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தற்போது ஏரியின் நீர் மட்டம் 43.50 அடியாக உள்ளது.
100 அடியைத் தொடும் பாபநாசம்..
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாபநாசம் அணை நீர் மட்டம் 100 அடியை தொடும் நிலையில் உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ளது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டமும் 100 அடியை தொடும் நிலையில் உள்ளது.
அணை மூடப்பட்டு இருப்பதாலும், தண்ணீர் வரத்து அதிகம் இருப்பதாலும் எந்த நேரத்திலும் நீர்மட்டம் 100 அடியை தொட்டு விடும் நிலை உள்ளது.
பாபநாசம் பாண தீர்த்த அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாபநாசம் அணை மூடப்பட்டு இருந்தாலும், தாமிரபரணி ஆற்றில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மேலும் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளமும், காட்டாற்று வெள்ளமும் சேர்ந்ததால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
இதேபோல் சேர்வலாறு அணையில் நேற்று காலை நிலவரப்படி 85 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. அணையின் நீர் மட்டம் 117.62 அடியாக இருந்தது.
மாவட்டத்தின் இன்னொரு முக்கிய அணையான மணிமுத்தாறு அணை பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அங்கு நேற்று காலை நிலவரப்படி 100 மி.மீ. அளவு மழை பதிவாகி இருந்தது. அணையின் நீர் மட்டம் 83.70 அடியாக இருந்தது.
செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36.10 அடி அளவுக்கு நிரம்பி விட்டது. தற்போது வரும் நீர் அப்படியே வெளியேறுகிறது.
கடையம் அருகே உள்ள கடனா நதி நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 83 அடி இருந்தது. அதன் முழு கொள்ளளவு 85 அடியாகும். அதுபோல் ராமநதி அணை நீர் மட்டம் 82 அடியாக இருந்தது. அதன் கொள்ளளவு 84 அடியாகும்.
களக்காடு பகுதியில் பெய்துவரும் கன மழையால் வடக்கு பச்சையாறு அணை நேற்று காலை நிலவரப்படி 25 அடியாக இருந்தது.
நாங்குநேரியான் கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் அந்த கால்வாய் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை பெய்த மழைக்கு 50 சதவீத குளங்கள் நிரம்பி உள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications