அகதிகள் முகாம் ஆய்வறிக்கை கருணாநிதியிடம் தாக்கல்
Subscribe to Oneindia Tamil

இந்த அறி்க்கை குறித்து வரும் 12ம் தேதி கருணாநிதி ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 2ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அகதிகள் முகாமை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து, நவம்பர் 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கருணாநிதி உத்தரவிட்டார்.
இதையடுத்து முகாம்களை அமைச்சர்கள், கலெக்டர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு, இலங்கை அதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இது தொடர்பான அறிக்கையை இன்று அமைச்சர்கள் முதல்வரிடம் தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கை மீது வரும் 12ம் தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications