300 ஆண்டு கால பழமையான விழா-5 லட்சம் விலங்குகளை பலியிட தயாராகும் நேபாளம்

ஆனால் இந்த விழாவைத் தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 நாட்களுக்கு இந்த விழா நடைபெறும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இது கொண்டாடப்படும். கடந்த 300 ஆண்டு காலமாக இந்த விழா நடந்து வருகிறதாம்.
நேபாளத்தின் தென் பகுதி எல்லையில் இந்த பரியபூர் கிராமம் அமைந்துள்ளது. இந்து பக்தர்கள் பெருமளவில் இந்த திருவிழாவுக்காக கூடுவார்கள்.
உலகிலேயே ஒரே இடத்தில் அதிக அளவிலான விலங்குகளைப் பலியிடும் நிகழ்ச்சி இதுதான் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு 25 ஆயிரம் எருமை மாடுகள், ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட 5 லட்சம் விலங்குகளைப் பலியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
கதிமாய் என்ற இந்து கடவுளுக்குப் படைப்பதற்காக இந்த பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறதாம். விலங்குளைப் பலியிட்டு கோரிக்கை வைத்தார் கதிமாய் அதை நிறைவேற்றுவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விழாவின் தொடக்கமாக முதலில் 2 காட்டு எலிகள், ஒரு பன்றி, ஒரு ஆடு மற்றும் குட்டி உள்ளிட்டவை வெட்டி பலி கொடுக்கப்படும். அதன் பின்னர் மற்ற விலங்குகளைப் பலியிட தொடங்குவார்கள்.
இந்த நிலையில் இந்த விழா மிகக் கொடூரமானது. இதை நிறுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதற்கு கதிமாய் விழாவின் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 300 ஆண்டுகளாக இது நடைமுறையில் இருந்து வரும் விழா. இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த பழக்கத்தை விட்டு விட்டு கோவில் திருவிழாவை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிறார் கோவிலின் தலைமைப் பூசாரியான மங்கள் செளத்ரி தரு.
ஆனால் புத்தரின் மறு பிறவி என புத்தமதத்தினரால் பரவலாக நம்பப்படும் 17 வயது நேபாள சிறுவன் ராம் பகதூர் பாம்ஜனும், இந்த விலங்குகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நடிகை பிரிஜிட் பர்டோட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பர்டோட் இந்த பழக்கத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். எனவே இந்த ஆண்டு விலங்குகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படக் கூடும் என்ற அச்சம் விழா ஏற்பாட்டாளர்களிடம் நிலவுகிறது.
ஆனால் நேபாள பிரதமர் இதுவரை நிகழ்ச்சிக்கு தடை எதுவும் விதிக்கவில்லை என்பது அவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications